மும்பை ஒருநாள் போட்டி: டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்

By செய்திப்பிரிவு

மும்பையில் சற்று முன் தொடங்கிய 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

காரணம் கடும் வெயில். இதில் தம் பவுலர்களை களைப்படையச் செய்ய டிவில்லியர்ஸ் விரும்பவில்லை என்பதும், மாறாக இந்திய பவுலர்களை வியர்வையில் நனைத்து அதன்மூலம் ஒரு பெரிய இலக்கை எட்ட திட்டமிட்டிருக்கலாம் என்பதும் தெரிகிறது.

இந்திய அணியில் மாற்றமில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் டீன் எல்கர், கைல் அபாட் சேர்க்கப்பட்டுள்ளனர், டுமினி, மோர்கெல் விளையாடவில்லை.

டி காக், டுபிளேசிஸ் களமிறங்கியுள்ளனர். டேவிட் மில்லர் 3-ம் நிலையில் இறங்கலாம் என்று தெரிகிறது.

பிட்சில் ஓரளவுக்கு நல்ல பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, பிட்சில் உள்ள பிளவுகளினால் ஸ்பின்னர்களுக்கும் உதவியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பெல்லாம் கூடுதல் பீல்டர்கள் நிறுத்த முடியாத விதிமுறைகளின் கட்டுபாடுகளினால் 40-50 ஓவர்கள் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்தது. தற்போது 20 வது ஓவர் முதல் 30-வது ஓவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் அணிகளுக்கு இலக்கைத் துரத்தும் போது வெற்றி வாய்ப்பு அதிகம்.

தோனி, அன்று சென்னையில் இறக்கியது போல் டவுன் ஆர்டரை வைத்துக் கொள்ள வேண்டும், அவர் 4-ம் நிலையில் களமிறங்கிடக் கூடாது.

புவனேஷ் குமார் முதல் ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி கொடுக்க தற்போது மோஹித் சர்மா பந்துகளில் 2 பவுண்டரி விளாசினார் ஹஷிம் ஆம்லா. தென் ஆப்பிரிக்கா 15/0.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

கருத்துப் பேழை

22 mins ago

இந்தியா

28 mins ago

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

34 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்