ரிஷப் பந்த் பொதுவாக லெக் திசையில்தான் அதிக ஷாட்களை ஆடுவார், அந்தப் பக்கம்தான் அவருக்கு வாகாக இருந்து வருகிறது, ஆனால் சமீப காலமாக அவரது ஆஃப்-சைடு ஆட்டமும் மேம்பட்டுள்ளதாக மே.இ.தீவுகள் ‘லெஜண்ட்’ பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் 140 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் பயனுள்ள பங்களிப்புகளை மேற்கொண்டு வருகிறார், ஆனால் அவர் தனது முழு அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கவில்லை. டெல்லி அணி ஒருவேளை அவரை சீனியர் வீரராகக் கருதி பொறுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதா என்பதும் தெரியவில்லை.
ஆனால் இந்தத் தொடரில் நல்ல பங்களிப்பு என்ற அளவில் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடிவருகிறார். இதற்கு அவர் ஆஃப் சைடில் மேற்கொண்டு வரும் மேம்பட்ட ஆட்டம் காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில் பிரையன் லாரா கூறியதாவது:
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் ஒரு பெரிய சொத்து. இன்றை தேதியில் அவர் தன் ஆட்டத்தை பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளார்.
அவரை நான் பார்க்கத் தொடங்கிய காலத்தில் அவரது ஆட்டம் பெரும்பாலும் லெக் திசையில் அதிகம் ரன்களை எடுப்பவர் என்பதாகவே இருந்தது. அவரது ஆரம்ப கால ரன் வரைபடத்தைப் பாருங்கள் ஆன் திசையில் அவரது நாட்டம் இருப்பது தெரியும்.
இது சரிப்பட்டு வரவில்லை என்பதை அவர் உணர்ந்திருப்பார் போல் தெரிகிறது, அதனால் பேட்டிங்கில் அவர் வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்று கருதுகிறேன்.
இப்போது பாருங்கள் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அவர் அடிக்கிறார். அவரது ரன் வரைபடம் கவன ஈர்ப்பு பெறும் அளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது. ஆம் இனி பவுலர்களுக்கு அவர் ஒரு பெரிய கவலையாகவே இருப்பார்.
இப்போது அவரிடம் நல்ல பேலன்ஸ் இருக்கிறது. எக்ஸ்ட்ரா கவர், கவர், பாயிண்ட் என்று தூக்கி அடிக்க ஆரம்பித்துள்ளார். லெக் திசையில் ஆடும்போது முன்பு ஆஃப் திசையில் லேசாகச் சாய்வார், இப்போது அதெல்லாம் இல்லாமல் நல்ல பேலன்ஸ் உள்ளது.
இது அவரது பேட்டிங்கில் பெரிய மாற்றம். இது நிச்சயம் அவரது ஆல் ரவுண்ட் பேட்டிங்குக்கு உதவும். இவர் நீண்ட காலம் ஆடுவார் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு கூறினார் பிரையன் லாரா.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
24 mins ago
வாழ்வியல்
48 mins ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
22 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago