சாக் ஷி மாலிக்குக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: லக்னோவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 45 வீராங்கனைகளில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக் ஷி மாலிக், மற்றும் சீமா பிஸ்லா, கிரண் உள்ளிட்ட 25 பேர் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் அனுமதியின்றி வெளியே சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரையும் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றி உத்தரவிட்டுள்ளது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு.இதில் சாக் ஷி மாலிக், சீமா பிஸ்லா, கிரண் ஆகியோருக்கு மட்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே சாக் ஷி மாலிக், சீமா பிஸ்லா, கிரண் ஆகிய 3 பேரும் தாங்கள் ரக் ஷா பந்தன் விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டுக்கு சென்றிருந்ததாகவும் முன் அனுமதி பெறாமல் சென்றது தவறுதான் என மன்னிப்பு கடிதம் வழங்கியதால் அவர்கள் 3 பேரும் தேசிய பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலாளர் வினோத் தோமர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

48 secs ago

விளையாட்டு

4 mins ago

இந்தியா

8 mins ago

உலகம்

15 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்