அடுத்த 8 ஆண்டுகளில் பிசிசிஐ ரூ. 3,722 கோடி வருவாய் ஈட்டும்: சஞ்சய் பட்டேல் தகவல்

By செய்திப்பிரிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வருவாய் பகிர்வு மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் 2015 முதல் 2023 வரையிலான அடுத்த 8 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ரூ.3,722 கோடி வருமானம் ஈட்டும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அதன் செயலர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர் மேலும் கூறியது:

கடந்த பல ஆண்டுகளாக ஐசிசியின் வருமானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பங்களிப்பு அதிகம். ஐசிசியின் வருமானத்தில் இந்தியாவின் பங்களிப்பு 68 சதவீதமாக இருந்தபோதிலும் அதில் 4 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு திரும்ப கிடைத்தது. ஆனால் இனி 4 சதவீதத்துக்குப் பதிலாக இந்தியாவுக்கு 21 சதவீத பங்கு கிடைக்கும் என்பதை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

இந்தியா

46 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்