ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கீலாங் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் கிளிங்கர் 43 ரன்களையும், ஹென்ரிக்ஸ் 56 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணியில் குலசேகரா 4 விக்கெட்களையும், மலிங்கா, பண்டாரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட, குணரத்னே பவுண்டரி அடித்து தனது அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். இப்போட்டியில் 84 ரன்களைக் குவித்த குணரத்னே ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
8 hours ago
உலகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
11 hours ago