இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கடந்த சீசனில் ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடினார். இந்நிலையில் குடலிறக்கம் காரணமாக அவர் இந்த ஆண்டு தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த 17 வயதான வாஷிங்டன் சுந்தரை புனே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சுந்தர், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார்.
வாஷிங்டன் சுந்தர் கூறும் போது, “அஸ்வின் தலைசிறந்த வீரர். அவருக்கு பதிலாக புனே அணிக்கு தேர்வானதில் மகிழ்ச்சியே. ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள் ளதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன்.
நான் எந்தவித எதிர்பார்ப்புடன் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் விளையாட தயாராக இருக்கிறேன்'' என்றார்.
சுந்தர், சமீபத்தில் விஜய் ஹசாரே மற்றும் தியோதர் டிராபியை வென்ற தமிழக அணியில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
உலகம்
10 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago