சிஎஸ்கேவுடன் விளையாடுவது சவால்தான் : ஜெயவர்த்தனே

By செய்திப்பிரிவு

சிறப்பாக விளையாடி வரும் அணிக்கு எதிராக விளையாடுவது சவால்தான் என்று சிஎஸ்கேவுடனான போட்டி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டியில் 3 முறை கோப்பையை வென்றுள்ள இந்த இரு அணிகளும் மோதுவது, ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஜெயவர்த்தனே கூறும்போது, ''எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. இருப்பினும் சிஎஸ்கேவுடன் விளையாடுவது பெரிய போட்டிதான். 2019 ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது வரை தோற்கடிக்கப்படாத அணியாக உள்ளது. சிறப்பாக விளையாடி வரும் அணிக்கு எதிராக விளையாடுவது சவால்தான்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்