இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மைதானத்தில் ரசிகர் ஒருவர் மைதானத்தில் தோனியை துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் நடந்த இரண்டாது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் அற்புதமான தனிமனித போராட்ட சதத்தினால் 250 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றிக்கு இடையில், ஆஸ்திரேலியா பேட்டிங் செய்வதற்கு முன்னர், மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் களமிறங்கிய போது, ’தல; என்று டி சர்ட்டில் எழுதிய ரசிகர் ஒருவர் தோனியை கட்டிபிடிக்க மைதானத்துக்குள் ஓடி வந்தார்.
அவரை கண்ட தோனி அவரிடம் பிடிப்படாமல் இருக்க சக வீரர்களுக்கு பின்னால் விளையாட்டாக மறைந்துக் கொண்டு மைதானத்தில் ஓடினார்.
ரசிகரும் விடாமல் தோனியை துரத்த ஒரு தருணத்தில் மைதானத்தின் நின்ற தோனி அந்த ரசிகரை கட்டி அணைத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
47 mins ago
விளையாட்டு
42 mins ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago