ரஞ்சி கோப்பையில் கேரள அணியை 151 ரன்கள் வித்தியாசத் தில் வீழ்த்தியது தமிழக அணி.
சென்னையில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் கேரள அணிக்கு 369 ரன்களை இலக்காக தமிழக அணி நிர்ணயித்தது. இலக்கை நோக்கி விளையாடிய கேரள அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்தது.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை விளையாடிய கேரள அணி 89 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 91, ஜோசப் 55 ரன்கள் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் நடராஜன் 5, ஷாய் கிஷோர் 2, பாபா இந்திரஜித் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
24 mins ago
சினிமா
36 mins ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago