எதையும் வைராக்கியத்துடன் செய்து முடிக்கும் நீங்கள், மனதில் பட்டதை பளிச்சென பேசும் பழக்கம் உடையவர்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அவ்வப்போது ஆரோக்ய குறைவை தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்கிறார். அஷ்டமத்துச் சனி என்பதால் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். முக்கியப் பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது.
பிள்ளைகளின் திருமணம், உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகள் தாமதமாகி முடியும். சொத்து வாங்குவதற்கு முன் அசல் பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் எடை மிகுந்த பொருட்களை தூக்க வேண்டாம். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீக சொத்தில் பிரச்சினைகள் வந்து சரியாகும். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். 19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். இழுபறியான வேலைகள் முடியும்.
குழந்தை பாக்கியம் உண்டு. தாமதமானாலும் எதிர்பார்த்த பணம் வரும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு சுகாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும்.
மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கண்ணாம்பூச்சியெல்லாம் வேண்டாம். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். புதிய நண்பர்களை நம்பாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! பொதுக் கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள்.
கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களால் உதவிகள் உண்டு.
வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளாவீர்கள்.
உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக ஊழியர்களால் மறைமுக அவமானம் வந்து நீங்கும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும். சம்பள பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
இந்த சனி மாற்றம் அலைச்சலையும், செலவினங்களை யும் ஒருபக்கம் தந்தாலும், விடாமுயற்சியால் இடையிடையே வெற்றிகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: மதுரை மாவட்டம், சோழவந்தான் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் சென்று நெய் அல்லது எள் விளக்கேற்றியும், எள் சாதம் அன்னதானமாகவும் வழங்கியும் வணங்குங்கள். அஷ்டமத்துச் சனியால் வரும் பாதிப்புகள் விலகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
12 mins ago
வாழ்வியல்
18 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago