சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்

By மகராசன் மோகன்

பு

துயுகம் தொலைக்காட்சியில் ‘நட்சத்திர ஜன்னல்’ சீசன் 2 நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தியன்று (25-ம் தேதி) தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 27-ம் தேதி முதல் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. முதல் சீசன் போலவே இந்த முறையும் நடிகை சங்கீதா தொகுத்து வழங்குகிறார். இளம் தலைமுறையினர், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி குறித்து சங்கீதா கூறியதாவது:

திரையுலகப் பிரபலங்கள் தங்களது இறுக்கத்தைக் களைந்து இயல்பாக உரையாடிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி இது. முதல் சீசனில் இயக்குநர் பாலா, சிம்பு உள்ளிட்டோர் மனம்திறந்து பேசினர். எனக்கு திரையுலக அனுபவம் இருப்பதால், இந்த நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக, விறுவிறுப்பாகக் கொண்டுசெல்ல பல புதுமையான திட்டங்களுடன் இந்த 2-வது சீசனை நகர்த்திச் செல்ல உள்ளேன்.

பிரபலங்கள் தங்களது திரையுலக அனுபவங்கள், பயணங்களைப் பற்றி எதார்த்தமாக, ஒளிவுமறைவின்றி உரையாடுவார்கள். சம்பந்தப்பட்ட பிரபலத்தின் அனுமதியோடு, அவர்களது வாழ்க்கையை நெருங்கிப்பார்க்கும் அனுபவம் நமக்கு கிடைக்கும்.

சில முக்கிய சுற்றுகளில் நிகழ்ச்சிக்கு யார் வருகிறார்கள், கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு யார் போனில் அழைக்கிறார்கள் என்று அரங்கில் இருக்கும் எங்களுக்கே தெரியாத வண்ணம் படமாக்க உள்ளோம். முதல் நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பங்கேற்கிறார். தொடர்ந்து இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி, ஆண்ட்ரியா பங்கேற்க உள்ளனர்’’ என்கிறார் சங்கீதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்