பாலம் கல்யாணசுந்தரத்துக்கு ஜே.பி.ஆர். கல்விக் குழுமம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது என்ற செய்தியைப் படித்து மகிழ்ச்சியடைந்தேன். தான் ஓய்வுபெற்ற காலத்தில் கிடைக்கப்பெற்ற பணம் முழுவதையும் அநாதை இல்லத்துக்குக் கொடுத்துவிட்டு, பாலம் என்ற சமூக சேவை அமைப்பு ஏற்படுத்தி, அதன் மூலம் எண்ணற்ற உதவிகளைச் செய்துவரும் இவரைப் போன்றவர்களை ஊக்கப்படுத்துவது மிகவும் அவசியம். சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கும் பாலம் அமைப்பினர் உதவிக்கரம் நீட்டியதை மறக்க முடியாது.
- கோ. நல்லசிவன், திருநெல்வேலி.
மாயாபஜாருக்குத் தேவை!
குழந்தைகளுக்கு அரசியல் பால பாடத்தைச் சோற்றுடன் ஊட்டுகிற பக்குவத்தை இணையகளம் பகுதி சொல்லித்தந்துள்ளது. அம்பேத்கரை அழகாக அறிமுகப்படுத்தியது போல, மற்ற தலைவர்களைப் பற்றியும் இதே பாணியில் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் ‘மாயா பஜாரில்’ கட்டுரைகள் வந்தால் சிறப்பாக இருக்கும்.
- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
முக்கிய செய்திகள்
உலகம்
34 mins ago
விளையாட்டு
57 mins ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago