தமிழர்களில் பலர் திருமண பந்தத்தின் புனித அணியாகக் கருதி வழிவழியாக, பண்பாட்டின் அடையாளமாக நம்பிக்கையுடன் அணியும் தாலியை, பெரும்பான்மைத் தமிழர்களின் பண்பாட்டை வெறுக்கும் ஓர் இயக்கத்தினர் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்து, விருப்பம் உள்ளவர்கள் அங்கே தாலியை அகற்றிக்கொள்ளலாம் என்பது பெரும்பான்மை மக்களின் வழக்கத்திலுள்ள கலாச்சாரத்தை திட்டமிட்டு இழிவுபடுத்துகின்ற செயல் அல்லவா? இதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் கலவரமும் எழத்தானே செய்யும். இதற்கு நீதிமன்றம் அல்லது அரசுதானே வேலியிட முடியும்.
நடிகையும் சமூக ஆர்வலருமான குஷ்பு சொல்வதுபோல், ‘‘தாலி அணிவதும் கழற்றி எறிவதும் தனிநபர் விருப்பம் என்றாலும், இதைத் திடீரென்று பொது நிகழ்ச்சியாக ஓர் இயக்கத்தினர் செய்வது என்பது, இந்து அமைப்புகளுக்கு எதிராக மட்டுமல்ல, அமைப்பு சாராத பல கோடி தமிழர்களுக்கு எதிரானதும் ஆகும்.’’
- கு.மா.பா. திருநாவுக்கரசு,சென்னை.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
10 mins ago
வாழ்வியல்
34 mins ago
தமிழகம்
50 mins ago
ஆன்மிகம்
8 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago