இந்திய ரூபாய் நோட்டுகளில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படத்தோடு இந்துக் கடவுளரான லட்சுமி, விநாயகர் படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது தேசிய அரசியலில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
கேஜ்ரிவாலின் இந்தக் கருத்தை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன. பாஜக ஆட்சி செய்துவரும் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வருவதை ஒட்டித் தன்னை இந்து ஆதரவாளராகக் காண்பித்துக்கொள்வதற்காக கேஜ்ரிவால் இப்படிப் பேசியிருப்பதாக பாஜக கூறியுள்ளது. மேலும், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு எதிரான கருத்துகளைப் பேசிய கேஜ்ரிவால், இப்போது இப்படிப் பேசியிருப்பது இந்துக்களைக் கவர்வதற்கான தேர்தல் தந்திரம் என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியிருக்கிறார். அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பாஜக, ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றின் துணை அமைப்பு என்கிற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு வலுக்கூட்ட இந்தத் தருணத்தைக் காங்கிரஸ் பிரமுகர்கள் பயன்படுத்திவருகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
41 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago