மதுரை உயர் நீதிமன்றம் ‘பனை மரத்தை வெட்டுகிறவர்களுக்குத் தண்டனை நிச்சயம் என்ற நிலை வர வேண்டும்’ என்று அறிவித்தபோது, விளிம்புநிலை மக்களின் வரலாற்று அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியம், “திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ‘திருபனங்காட்டாங்குடி’ என்ற ஊரிலுள்ள கோயிலின் ஸ்தல விருட்சமே பனைதான்; அங்கு கிடைத்த கல்வெட்டு ஒன்றில், ‘உயிருள்ள பனையை வெட்டினால் தண்டனை’ வழங்கப்பட்ட செய்தி கிடைக்கிறது; மன்னராட்சிக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அந்த மரபை மதுரை உயர் நீதிமன்றம் பின்பற்றியுள்ளது” என்று பாராட்டினார். அவர் ‘பனை மரமே! பனை மரமே!’ என்ற அற்புதமான நூலை தமிழுக்குத் தந்துள்ளார்.
இயற்கையின் கொடையில் பனை மரம் ஓர் அற்புத நிகழ்வு. ‘ஸ்தலவிலாசம்’ எனற பழைய நூலொன்று பனை மரத்தால் மனிதர்களுக்கு 801 வகையான பயன்கள் வாய்க்கின்றனவென்று பட்டியல் போட்டுள்ளது. 36 முதல் 42 மீட்டர் வரை வளர்ந்து 150 ஆண்டுகள் வாழ்ந்து பயன் அளிக்கக்கூடிய பனை மரம் 2018-ல் எடுத்த கணக்கின்படி, இந்தியா முழுக்க (பெரும்பாலும் ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு) 8.59 கோடியாம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5.10 கோடி. செங்கல் சூளைகளுக்காக, உலகப் பன்னாட்டு முதலாளிகளின் பெரும் தொழிற்சாலைகளுக்கு நில ஆக்கிரமிப்பு செய்வதற்காக என்றெல்லாம் கூசாமல் வெட்டித் தள்ளிவிட்டார்கள். கஜா புயலின்போது எல்லா மரங்களும் மண்ணைக் கவ்விய நிலையில், ஒன்றுகூட சாயாமல் மண்ணைப் பிடித்து நிமிர்ந்து நின்ற மரம் பனைதான். அதற்குத்தான் இந்தக் கதி!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
9 hours ago
வலைஞர் பக்கம்
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago