காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை: 2 போலீஸார் காயம்

By செய்திப்பிரிவு

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ஊரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து ரகசியத் தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது" என்றார்.

2 போலீஸார் காயம்..

இதற்கிடையே, பாரமுல்லா மாவட்டத்திலேயே சோபூர் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் போலீஸார் இருவர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

க்ரைம்

29 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்