அரசு நிலத்தை அனுமதியின்றி பயன்படுத்தி வருவதற்கு விளக்கம் கேட்டு, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு அமேதி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சோனியா காந்தியின் தலைமையில் செயல் பட்டு வரும் ராஜீவ் காந்தி அறக் கட்டளைக்கு, அமேதி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து அமேதி மாவட்டத் தின் டிலோய் தாலுகா துணை மண்டல அதிகாரி அசோக் சுக்லா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெய்ஸ் என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான 10 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலம் உள்ளது. இந்த இடத்தில் சமூக நலக் கூடம், பள்ளிகள் மற்றும் மற்ற சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால், ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்ளூர் பெண்களுக்கு இந்த இடத்தில் பயிற்சி அளித்து வருகிறது. அரசு அனுமதியின்றி நிலத்தை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எந்த அரசு உத்தரவின்படி நிலத்தை பயன்படுத்தி வருகிறீர்கள் என்று கேட்டுள்ளோம். ஆனால், இது வரை ராஜீவ் காந்தி அறக்கட்டளை யிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு அசோக் சுக்லா கூறினார்.
அறக்கட்டளை மறுப்பு
அறக்கட்டளை மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘நோட்டீஸுக்கு கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பதில் அனுப்பி விட்டோம். ‘மனூஜ் கல்யாண் கேந்திராவுக்கு அந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கேந்திராவுடன் ராஜீவ் காந்தி அறக்கட்டளை இணைந்து கடந்த 13 ஆண்டுகளாக அங்கு உள்ளூர் பெண்களுக்குப் பல்வேறு பயிற்சி கள் அளித்து வருகிறோம் என்பதை அந்த பதிலில் கூறியிருக் கிறோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
கல்வி
16 mins ago
ஜோதிடம்
48 mins ago
ஜோதிடம்
53 mins ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago