அமராவதிதான் ஆந்திர தலைநகரம்: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்திர தலைநகர விவகாரம் குறித்து நேற்று மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதில் வருமாறு: 2014 மாநிலப் பிரிவினை சட்டப்படி அமராவதிதான் ஆந்திர மாநிலத்தின் தலைநகரம். இதற்கு மத்திய அரசு இப்போதும் கூட கட்டுப்பட்டுள்ளது. ஏனெனில் மாநில பிரிவினை சட்டம் 5 மற்றும் 6-ன் படியே அமராவதி உருவானது. முதல்வர் ஜெகன் அரசு எடுக்கும் 3 தலைநகரங்கள் முடிவுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பும் இல்லை. அமராவதி தான் தலைநகரம் என 2015-ம் ஆண்டிலேயே முடிவானது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், மேலும் பேசக் கூடாது. இவ்வாறு நித்யானந்த ராய் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

58 secs ago

சுற்றுச்சூழல்

36 mins ago

க்ரைம்

40 mins ago

இந்தியா

38 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்