மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக 2-வது முறையாக தேர்வாகிறார் முகுல் ரோஹத்கி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்றது. அப்போது மத்திய அரசின் 14-வது தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோஹத்கி (67) நியமிக்கப்பட்டார். அவர் 2017 வரை பதவியில் நீடித்தார்.

இதைத் தொடர்ந்து 15-வது தலைமை வழக்கறிஞராக வேணுகோபால் (91) நியமிக்கப்பட்டார். அவர் 3 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்த பிறகு அவ்வப்போது பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. கடைசியாக 3 மாதங்கள் பதவி நீட்டிக்கப்பட்டது. இதன்படி அவரது பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தலைமை வழக்கறிஞராக பதவியில் தொடர அவர் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முகுல் ரோஹத்கி 2-வது முறையாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்