டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்.பி. ராம்பிரசாத் சர்மா நேற்று நாடாளுமன்றத்துக்கு குதிரையில் வந்தார்.
டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு பாட்டை குறைக்கும் வகையில் ஒற்றைப்படை தேதிகளில் ஒற்றைப் படை பதிவு எண் கார்களையும் இரட்டைப்படை தேதிகளில் இரட் டைப்படை எண் கார்களையும் சாலையில் அனுமதிக்கும் திட்டம் கடந்த 15-ம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத் திட்டத்தை அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு விளம்பர நோக்கத்தில் செயல் படுத்தி வருவதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன அனுமதி திட்டத்துக்கு நூதன எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக எம்.பி. ராம்பிரசாத் சர்மா நேற்று நாடாளுமன்றத்துக்கு குதிரையில் வந்தார். இதற்கு முன் பாஜக எம்.பி. பரேஷ் ரவால் கடந்த திங்கள்கிழமை ஒற்றைப்படை எண் காருக்கு பதிலாக இரட்டைப்படை எண் காரில் நாடாளுமன்றத்துக்கு வந்து விதியை மீறினார். பிறகு அவர் இதற்கு வருத்தம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
9 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago