ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் நடந்த 2 என்கவுன்ட்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்தநாக், குலாம் மாவட்டங்களில் நேற்று மாலை இச்சம்பவம் நடந்தது.
இது குறித்து போலீஸார் தரப்பில், நேற்று மாலை நவ்காம் அனந்தநாக் மாவட்டம், குல்காம் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை ஐஜி விஜய் குமார் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அடையாளம் தெரிந்தது. மற்ற இருவரின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது மிகப்பெரிய வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.
இந்த என்கவுன்ட்டரில் போலீஸார் சிலரும் காயமடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
6 hours ago
வலைஞர் பக்கம்
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago