இந்தியாவில் கரோனா தொற்று குறைந்து வரும்நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 446 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 830 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 42 லட்சத்து 73 ஆயிரத்து 300 ஆகஅதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோரில் 60 சதவீதம் கேரளாவில் இருந்து மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.20 ஆகஉயர்ந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59ஆயிரத்து 272 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 446 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 58 ஆயிரத்து 186ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 60.83 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 45பரிசோதனைகள் கடந்த 24 மணிநேரத்தில் செய்யப்பட்டுள்ளன.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33 கோடியே 53 லட்சத்து 2 ஆயிரத்து 126 ஆகஉயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுவரை 106.14 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
தமிழகம்
23 mins ago
கருத்துப் பேழை
31 mins ago
இந்தியா
37 mins ago
விளையாட்டு
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
43 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago