உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
சமூகத்தில் பின்தங்கியவர்களின் கல்வி மற்றும் சமூக மாற்றத்துக்கும், மேம்பாட்டுக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கியும் சர்தார்தாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அகமதாபாத்தில் ஏற்படுத்தப்பட்ட சர்தார்தாம் பவனில், மாணவர்களுக்கு நவீன வசதிகள் உள்ளன. தி கன்யா சத்திராலயா, 2000 மாணவிகளுக்கான விடுதி வசதிகளை பொருளாதார அளவுகோலை பொருட்படுத்தாமல் அளிக்கிறது.
சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
‘‘உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை நிறுவப்படும். இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்பெறுவர்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
20 mins ago
க்ரைம்
24 mins ago
இந்தியா
22 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago