லஷ்கர்- இ-தொய்பா ட்ரோன் தாக்குதல்; ராணுவம் பதிலடி: பெரும் தாக்குதல் தவிர்ப்பு

By செய்திப்பிரிவு

ஜம்முவில் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து உடனடியாக ராணுவம் செயலில் இறங்கியதால் பெரும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு விமான நிலைய வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் நேற்று அதிகாலையில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஜம்மு விமான நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நார்வால் பகுதியில், 5கிலோ வெடிமருந்துடன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் அறிந்ததும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை துணைத் தளபதி ஏர் மார்ஷர் எச்.எஸ்.அரோரா, ஏர் மார்ஷல் விக்ரம் சிங் ஆகியோருடன் பேசி விவரங்களை கேட்டறிந்தார்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறும்போது, “இந்த வகையான வெடிபொருட்களை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. எனவே இதில் அவர்களின் கைவரிசை இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் ஜம்மு - காஷ்மீர் மண்டலத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக ராணுவம் செயலில் இறங்கியதாகவும், ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்