ரூ.5 கோடி நிவாரணத் தொகையை தொடர்ந்து தமிழகத்துக்கு பால் பவுடர் வழங்க கர்நாடக முதல்வர் நடவடிக்கை

By இரா.வினோத்

மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தமிழகத்துக்கு ரூ. 5 கோடி நிவாரண உதவித் தொகை அறிவித்திருந்த நிலையில், மேலும், பால் பவுடர், மருந்து பொருட்களையும் அனுப்பி வைக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழக மக்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் ரூ. 5 கோடி நிவாரண உதவி அறிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழக அரசைத் தொடர்பு கொண்ட கர்நாடக தலைமைச் செயல‌ர் கவுஷிக் முகர்ஜி, தமிழகத்துக்கு தேவையான நிவாரண பொருட்களையும், மீட்பு படையினரையும் அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே முதல்வர் சித்தராமையா, ''தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு போதிய பால் பவுடரும், மருந்து பொருட்களும் கிடைக்கவில்லை என அறிகிறேன். எனவே தமிழக‌த்துக்கு தேவையான பால் பவுடரை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கர்நாடக பால் உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் பாதிக்கப்பட்ட‌ மக்களுக்கு தேவையான மருந்துகளை அனுப்பி வைக்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்