வேளாண் விளை பொருட்களுக்கு அரசு வழங்கும் குறைந்தபட்ட ஆதரவு விலை (எம்எஸ்பி) தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021-22-ல் குறுவை பட்டத்தில்அறுவடையாகும் விளைபொருட் களுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலையை மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. இதன்படி குவிண்டால் நெல்லின் விலை ரூ.1,940 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு நிர்ணயித்த விலை ரூ.1,868 ஆகும்.
இதேபோல பாஜ்ரா, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எள்ளுக் கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.452-ம் துவரம் பருப்புமற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட் டவற்றுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக தலா ரூ.300-ம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
மத்திய அரசின் கொள்முதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப் படவில்லை.
இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறைகைவிடப்படும் என்ற அச்சமும் இதற்குக் காரணமாகும். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறை தொடரும் என்று அரசு கூறி வருகிறது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
தமிழகம்
17 mins ago
கருத்துப் பேழை
25 mins ago
இந்தியா
31 mins ago
விளையாட்டு
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
37 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago