தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செகந்திராபாத் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு கடந்த சில மாதங்களாகவே நுரையீரலில் எரிச்சல் இருந்து வந்ததால் மருத்துவர்கள் அவருக்கு வீட்டிலேயே சிசிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் எரிச்சல் குறையவில்லை.

இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. எனினும் மேலும் சில பரிசோதனைகளை செய்வதற்காக நேற்று மதியம்2.30 மணியளவில் செகந்திராபாத் யசோதா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் ஆகியவைஎடுக்கப்பட்டது. ஒரு நாள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அவருடன் அவரது மகனும் அமைச்சருமான கே.டி. ராமா ராவ், மகள் கவிதா மற்றும் சிலர் உள்ளனர். ஆனால், பயப்படும்படி ஏதுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் பரவியதும், ஆளும் தெலங்கானா ராஷ்டிரசமிதி கட்சியின் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் மருத்துவமனை முன்பு குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

43 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்