நிதிஷ் குமாருக்கு மக்கள் வாக்களிக்க தயாரில்லை; கடும் முயற்சி செய்ய வேண்டிய நிலையில் பிரதமர் மோடி: சிராக் பாஸ்வான் விமர்சனம்

By செய்திப்பிரிவு

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மக்கள் யாருமே வாக்களிக்க தயாரில்லை. அதனால் தான் பிரதமர் மோடி கடுமையான முயற்சி செய்ய வேண்டிய சூழல் உள்ளது என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியை ஐக்கிய ஜனதாதளக் கட்சி அவமானப் படுத்தி விட்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் விமர்சித்துள்ளார்.

பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்த சிராக் பாஸ்வான் வெளியேறி தனித்து போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளக் கட்சியை விமர்சித்து வருகிறார்.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறியதாவது:
பிஹாரில் பாஜக கூட்டணிக்காக பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் செய்கிறார். அவர் கடுமையான முயற்சி செய்கிறார். ஆனால் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிஹார் மக்கள் யாருமே வாக்களிக்க தயாரில்லை. அதனால் தான் பிரதமர் மோடி கடுமையான முயற்சி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

க்ரைம்

16 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்