பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மக்கள் யாருமே வாக்களிக்க தயாரில்லை. அதனால் தான் பிரதமர் மோடி கடுமையான முயற்சி செய்ய வேண்டிய சூழல் உள்ளது என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியை ஐக்கிய ஜனதாதளக் கட்சி அவமானப் படுத்தி விட்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் விமர்சித்துள்ளார்.
பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்த சிராக் பாஸ்வான் வெளியேறி தனித்து போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளக் கட்சியை விமர்சித்து வருகிறார்.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறியதாவது:
பிஹாரில் பாஜக கூட்டணிக்காக பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் செய்கிறார். அவர் கடுமையான முயற்சி செய்கிறார். ஆனால் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிஹார் மக்கள் யாருமே வாக்களிக்க தயாரில்லை. அதனால் தான் பிரதமர் மோடி கடுமையான முயற்சி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
க்ரைம்
16 mins ago
சுற்றுச்சூழல்
52 mins ago
க்ரைம்
56 mins ago
இந்தியா
54 mins ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago