கேரளாவில் இன்று 8,253 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:
''கேரளாவில் இன்று 8,253 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நோயிலிருந்து இன்று 6,468 பேர் மீண்டுள்ளனர். இன்று தொற்று கண்டவர்களில் தொடர்பு மூலம் 7,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 939 பேருக்கான தொடர்பு ஆதாரம் தெரியவில்லை. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 67 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவர். கரோனாவால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,306 ஆக உயர்ந்திருக்கிறது. அதில் 25 பேர் இன்று இறந்துள்ளனர்
இன்றைய கரோனா வைரஸ் தொற்றாளர்களின் மாவட்ட வாரியான புள்ளி விவரங்கள்:
எர்ணாகுளம் 1,170, திருச்சூர் 1,086, திருவனந்தபுரம் 909, கோழிக்கோடு 770, கொல்லம் 737, மலப்புரம் 719, ஆலப்புழா 706, கோட்டயம் 458, பாலக்காடு 457, காசர்கோடு 200, வயநாடு 79. தொற்று கண்டறியப்பட்டவர்களில் 163 பேர் வெளியில் இருந்து மாநிலத்திற்குள் வந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக உள்நாட்டுத் தொடர்பு மூலம் தொற்றுப் பரவல்:
எர்ணாகுளம் 894, திருச்சூர் 1,070, திருவனந்தபுரம் 751, கோழிக்கோடு 738, கொல்லம் 730, மலப்புரம் 688, ஆலப்புழா 693, கோட்டயம் 391, பாலக்காடு 179, கண்ணூர் 326, பத்தனம் திட்டா 278, காசர்கோடு 186, வயநாடு 73.
மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை:
எர்ணாகுளம் 17, திருவனந்தபுரம் & கண்ணூர் தலா 9, கோழிக்கோடு 8, காசர்கோடு 6, திருச்சூர் 5, கோட்டயம் 4, பாலக்காடு 3, கொல்லம், பத்தனம்திட்டா & வயநாடு தலா 2.
இன்றைய பரிசோதனையில் நோய்த் தொற்றிலிருந்து மாவட்ட வாரியாக மீண்டவர்கள்:
திருவனந்தபுரம் 951, கொல்லம் 738, பத்தனம்திட்டா 250, ஆலப்புழா 472, கோட்டயம் 517, இடுக்கி 49, எர்ணாகுளம் 538, திருச்சூர் 481, பாலக்காடு 459, மலப்புரம் 207, கோழிக்கோடு 159 மற்றும் காசர்கோடு 385. தற்போது 97,417 நோயாளிகள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 2,87,261 பேர் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 2,83,517 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறிப்பாகத் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 2,60,062 பேர், மருத்துவமனைகளில் 23,455 பேர் உள்ளனர். 3,429 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 67,593 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மொத்தம் 42,80,204 மாதிரிகள் தற்போது வரை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று 16 புதிய ஹாட்ஸ்பாட்கள் உள்ளன, எட்டு இடங்கள் விலக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இப்போது 624 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
34 mins ago
க்ரைம்
38 mins ago
இந்தியா
36 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago