ஒடிசாவில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்டைப் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த 4-5 தினங்களில் மேற்கு – வடமேற்காக நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒடிசா, மேற்கு வங்க கங்கைக் கரையோரப் பகுதி, ஜார்க்கண்ட் ஆகியவற்றில் வரும் 28-ம் தேதி வரை கனமழை பரவலாகப் பெய்யக் கூடும். சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தானில் இம்மாதம் 26 முதல் 28ம் தேதி வரையிலும் கனமழை பெய்யலாம். ஆகஸ்டு 25 மற்றும் 26 தேதிகளில் ஒடிசாவிலும், 27-ம் தேதியன்று சத்தீஷ்கரிலும் அதி கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
இந்தியா
14 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
36 mins ago
சினிமா
43 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
கல்வி
2 hours ago
சினிமா
2 hours ago