ஒடிசாவில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

ஒடிசாவில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வடக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்டைப் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த 4-5 தினங்களில் மேற்கு – வடமேற்காக நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஒடிசா, மேற்கு வங்க கங்கைக் கரையோரப் பகுதி, ஜார்க்கண்ட் ஆகியவற்றில் வரும் 28-ம் தேதி வரை கனமழை பரவலாகப் பெய்யக் கூடும். சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தானில் இம்மாதம் 26 முதல் 28ம் தேதி வரையிலும் கனமழை பெய்யலாம். ஆகஸ்டு 25 மற்றும் 26 தேதிகளில் ஒடிசாவிலும், 27-ம் தேதியன்று சத்தீஷ்கரிலும் அதி கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்