பிரேசில் நாட்டின் ஒரு மாகாண ஆளுநர் நிதி முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. அவர் இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நாடு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான பிரேசில் அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான 67 வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை கடந்த மாதம் முடக்கியது.
இதனால் பாதிக்கப்பட்ட ஹாமில்டன் ஹவுஸ்வேர் நிறுவனத்தின் (மில்டன் பிராண்ட்) சார்பில் வழக்கறிஞர் விஜய் அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “அமலாக்கத் துறை நடவடிக்கையால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் வாதிடும்போது, “நிதி முறைகேடு தகவலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இந்தியா, பிரேசில் நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, பிரேசில் அரசின் கோரிக்கையை ஏற்று 67 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
27 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
6 hours ago
வலைஞர் பக்கம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago