கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஹரியாணா மாநில மக்களுக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனா வைரஸால் மாநிலத்தின் நிதி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. பொருளாதார பாதிப்பு காரணமாக ஒருவர்கூட உணவு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு ரூ.636 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 3 மாதங்களாக மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.
இந்த ஆண்டு கல்வியை முடித்தவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடனுக்கான 3 மாத வட்டியை மாநில அரசு செலுத்தும். அதேபோல, கடந்த ஆண்டு கல்வியை முடித்து கரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் வேலை கிடைக்காத அல்லது தொழில் தொடங்க முடியாத நிலையில் உள்ளவர்களின் கல்வி கடனுக்கான 3 மாத வட்டியையும் அரசு செலுத்தும். இதன் மூலம் 36 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மாநில அரசுக்கு ரூ.40 கோடி செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
31 mins ago
விளையாட்டு
26 mins ago
கல்வி
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago