ஜெய்பூர்: கரோனா நோயாளி மரணம்

By பிடிஐ

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கரோனா பாசிட்டிவ் நோயாளி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு வயது 82.

இவர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் ஞாயிறன்று பலியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் மேலும் 5 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

பலி எண்ணிக்கை மாநிலத்தில் 5 ஆக அதிகரித்துள்ளது.

இவர் என்ன காரணத்தினால் இறந்தார் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,378 ஆக அதிகரித்துள்ளது. ஒரு சில தகவல்கள் 3,500 என்று தெரிவிக்கிறது. உலகம் முழுதும் 11 லட்சம் பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பலி எண்ணிக்கை 104 ஆனது.

பாகிஸ்தானில் 2,800 பேர் வரை தொற்று ஏற்பட்டுள்ளது சுமார் 40 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

க்ரைம்

28 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்