கரோனா ஊரடங்கு; டெல்லியில் குறையும் குற்றங்கள்: புள்ளி விவரங்கள் வெளியீடு

By செய்திப்பிரிவு

கரோனா பரவுவது வேகமாக அதிகரித்து வருவதால் பெருமளவு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் குற்றங்கள் குறைந்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.

கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. கரோனா பரவுவது வேகமாக அதிகரித்து வருவதால் பெருமளவு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் குற்றங்கள் குறைந்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான புள்ளி விவரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி மார்ச் மாதம் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை டெல்லியில் நடந்த குற்றச் செயல்களை கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

58 mins ago

விளையாட்டு

4 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

33 mins ago

உலகம்

31 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

56 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

மேலும்