பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டின் நிலவரம் தொடர்பாக கேபினட் செயலாளரும் முதன்மை செயலாளரும் பிரதமரிடம் நாள்தோறும் விரிவான விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாள்தோறும் கலந்துரையாடி வருகிறார். பல்வேறு தரப்பு மக்களுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களின் ஆலைசனைகளைக் கேட்டறிந்து வருகிறார். அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், சுகாதாரத் துறை அமைச்சர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நாள்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
37 mins ago
வர்த்தக உலகம்
45 mins ago
ஆன்மிகம்
3 mins ago
இந்தியா
13 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
1 hour ago