டெல்லியில் மீண்டும் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கவிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சி இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
டெல்லி தேர்தல் முடிவுகள், “மதரீதியாக மக்களைப் பிரித்தாளும் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கும் மக்கள் கொடுத்துள்ள பதிலடியாகும் இது” என்றார்.
தன் ட்விட்டர் பக்கத்தில், “அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மிக்கும் வாழ்த்துக்கள், மக்கள் சார்பு, அனைவரையும் உள்ளடகிய ஒரு அரசியலுக்கான அடித்தளமாக இந்த முடிவுகள் இருக்கட்டும்” என்றார்.
பிற்பாடு செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன், “காங்கிரஸ் கட்சி சிலபல பாடங்களைக் கற்க வேண்டும், ஆம் ஆத்மியுடன் அவர்கள் இணையத் தயாராக இல்லை. பாஜகவின் மக்கள் விரோத திட்டத்துக்கு எதிராக மாற்றைக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற மக்களின் எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் தலைமையில் டெல்லியில் இதுதான் நடந்தது, ஆம் ஆத்மிக் கட்சி அனைவருக்கும் ஊக்கமளிக்கும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது” என்றார் பினராயி விஜயன்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
24 mins ago
ஜோதிடம்
28 mins ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
7 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
வேலை வாய்ப்பு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
கல்வி
9 hours ago