உயர் தொழில்நுட்ப பூமிக் கண்காணிப்பு ‘கார்ட்டோசாட்-3’ விண்ணில் பாய்ந்தது

By செய்திப்பிரிவு

'கார்ட்டோசாட் - 3' என்ற செயற்கைக்கோளை, 'பி.எஸ்.எல்.வி. - சி46' ராக்கெட் உதவியுடன், 'இஸ்ரோ' புதன்கிழமை (நவ.27) காலை விண்ணில் செலுத்தியது.

நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது இஸ்ரோ. தற்போது ராணுவ ஆய்வுகளுக்கு உதவுவதற்காக 'கார்ட்டோசாட் - 3' செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அதனுடன் அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து 509 கி.மீ., தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோளாகும். இது துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டதாகும்.

இதுவரை ஐ.எஸ்.ஆர்.ஓ. மே 2005 முதல் 8 கார்ட்டோசாட் விண்கலங்களை செலுத்தியுள்ளது. கார்ட்டோசாட் -2 வகை மாதிரியான இவை ராணுவப் பயன்பாடுகளுக்காகச் செலுத்தப்பட்டது.

கார்ட்டோசாட் செயற்கைக்கோள்களின் சிறப்பம்சம் என்னவெனில் இயற்கை புவியியல் அமைப்புகளையும் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்கள் இரண்டையுமே துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவதாகும்.

கார்டோசாட் -3 செயற்கைக் கோள் நகர மேம்பாட்டுத் திட்டம், வேளாண்மை, நீராதார மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கான தரவுகளை அனுப்பும் வல்லமை கொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்