சிவசேனாவுக்கு ஆதரவு தர காங்கிரஸ் தயக்கம்? - நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக கூடிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் முடிவு ஏதுவும் எடுக்கப்படவில்லை.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

மகாராஷ்டிரவில் புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைந்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.
ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார்.

இதையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக உறுதிபடத் தெரிவித்து விட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா முயன்று வருகிறது. அந்த கட்சிகளின் நிர்வாகிகளை சிவசேனா தலைவர்கள் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில மூத்த தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

ஆட்சியமைக்க மிலிந்த் தியோரா போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சஞ்சய் நிருபம் போன்றோர் சிவசேனாவுக்கு ஆதரவு தர எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் புதிய அரசில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என கருதுகின்றனர்.

எனவே மகாராஷ்டிர அரசியல் நிலவரம் மட்டுமின்றி தேசிய அரசியல் நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால் அவசரப்பட வேண்டாம் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்தை அறிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க டெல்லியில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 mins ago

ஜோதிடம்

22 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்