50 வயதான மணமகன் தேவை: தாய்க்கு மாப்பிள்ளை தேடும் மாணவி; பாராட்டும் நெட்டிசன்கள்

By செய்திப்பிரிவு

இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு 50 வயதான மணமகன் தேவை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தாய்க்கு மணமகன் தேடும் அப்பெண்ணை பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

ஆஸ்தா வர்மா என்ற பெண் ஒருவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கடந்த வியாழக்கிழமை தன் தாயுடன் எடுத்த செல்ஃபியை பதிவிட்டு, அவரது தாயை திருமணம் செய்துகொள்ள அழகான 50 வயதான நபர் தேவை என பதிவிட்டுள்ளார்.

மேலும், மணமகன் சைவ உணவு உண்பவராகவும், மது பழக்கம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என, ஆஸ்தா வர்மா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் சுயவிவரக் குறிப்பில், தான் சட்டக்கல்லூரி மாணவி என ஆஸ்தா வர்மா குறிப்பிட்டுள்ளார்.

தன் தாய்க்கு மணமகன் தேடும் ஆஸ்தா வர்மாவை சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். அவரை, "பாசமான, கனிவான மகள்” என்று பாராட்டும் நெட்டிசன்கள், அவர் விரும்புவது போன்றே அவரின் தாய்க்கு ஏற்ற மணமகன் கிடைப்பார் என வாழ்த்தி வருகின்றனர்.

இந்த பதிவை இன்று (நவ.2) மதியம் வரை, 27,000-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

41 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்