புதுடெல்லி
துர்கா பூஜை கொண்டாட்டத்தையொட்டி பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி திருவிழா நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி முடிந்து இறுதியாக கொண்டாடப்படும் தசரா நாளை கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் இது துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் ‘‘உலகம் முழுவதும் க உற்சாகத்துடன் துர்காபூஜை கொண்டாடப்படுகிறது. இந்நேரத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! பலம், வலிமை, இரக்கத்தின் உருவமாக தாய் துர்கா விளங்குகிறாள். இந்த சமூகம் நன்றாக இருக்க அவர் ஆசீர்வதிக்கட்டும்’’ எனக் அவர் கூறியுள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியை ஆங்கிலத்திலும், வங்க மொழியிலும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதுபோலவே பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
வர்த்தக உலகம்
42 mins ago
இந்தியா
10 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago