கொல்கத்தா
பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் கொல்கத்தாவுக்கு வந்திருந்த நிலையில், விமானநிலையத்தில் சந்தித்த அவருக்கு புடவையை முதல்வர் மம்தா பானர்ஜி பரிசாக அளித்தார்.
பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் மேற்கு வங்க மாநிலம் மேற்கு புர்தவான் மாவட்டத்தில் உள்ள அசான்சோல் பகுதியில் உள்ள கல்யானீஸ்வர் கோயிலுக்கு நேற்று வழிபாடு நடத்த வந்திருந்தார்.
இந்த கோயிலுக்கு நேற்று வந்திருந்த பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் 12.45 மணிக்கு வந்திருந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்து, ஏற்ககுறைய 30 நிமிடங்கள் அங்கு செலவிட்டார். பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் வந்திருந்த தகவல் அறிந்தவுடன் மக்கள் அனைவரும் அவரைப் பார்க்கக் கூடினார்கள்.
அதன்பின் கொல்கத்தாவில் இருந்து புறப்படுவதற்காக விமானநிலையத்துக்கு நேற்று மாலை யசோதாபென் வந்திருந்தார். விமானநிலையத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டெல்லி செல்வதற்காக வந்திருந்தார்.
பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் வந்திருப்பது குறித்த தகவல் முதல்வர் மம்தாவிடம் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் புறப்படும் முன் யசோதாபென்னுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, அவருக்கு புடவையை பரிசாக அளித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். மாநில நிதி விவகாரங்கள், பிஎஸ்என்எஸ், ஏர்இந்தியா நிறுவன ஊதிய பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மம்தா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இன்று மாலை 4.30மணிக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியுள்ளது
பிடிஐ
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
3 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
17 mins ago
வலைஞர் பக்கம்
21 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
31 mins ago
இந்தியா
39 mins ago
க்ரைம்
36 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago