ஹைதராபாத்
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் தெலங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா சவுகான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அவர் பதவியேற்ற இன்றைய தினமே உடனடியாக மாநில அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் தெலங்கானா புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார். 6 பேர் இன்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களில் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
18 mins ago
விளையாட்டு
41 mins ago
வேலை வாய்ப்பு
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago