பஞ்சாப் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 18 பேர் பலி

By செய்திப்பிரிவு

சண்டிகர், பிடிஐ

பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் படாலா என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பேர் உயிர் இழந்து பலர் காயமடைந்துள்ளனர்.

இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என்றும் நிவாரண முயற்சிகளுடன் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குருதாஸ்பூர் மாவட்டம் படாலாவில் குடியிருப்புப் பகுதியில் உள்ள் இந்தப் பட்டாசு ஆலையில் மாலை 4 மணி சுமாருக்கு இந்த வெடிவிபத்து ஏற்பட்டுளது.

இந்த வெடிவிபத்தின் கோரத் தாக்கத்தினால் பட்டாசு ஆலை முழுதும் சேதமடைந்ததோடு இதன் தாக்கம் அருகில் இருந்த கட்டிடங்களிலும் ஏற்பட்டது.

தேசிய பேரிடர் குழு மாநில பேரிடர் மீட்புக் குழு ஆகியவையும் சம்பவ இடத்தில் தீயணைப்புப் படையினருடன் மாவட்ட நிர்வாகத்துடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சினிமா

14 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்