நாடாளுமன்ற கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமையும்: பிரதமர்

By பிடிஐ

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. நிலம் கையகப்படுத்துதல், ஜிஎஸ்டி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்த பிரதமர் நரேந்திரமோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து எம்.பி.க்களும் கட்சி பேதமின்றி நல்ல முடிவுகளை எட்ட ஒத்துழைப்பர் என நம்புகிறேன்.

சில முக்கிய முடிவுகளை எட்ட முழு ஒத்துழைப்பு அளிப்போம் என கடந்த கூட்டத்தொடரின் போது வாக்குறுதி அளித்த கட்சிகள் அதை கடைபிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

54 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்