பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்

By செய்திப்பிரிவு

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரண மாக அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துள்ளார். நியூயார்க்கைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் அவர் அமெரிக்காவில் வசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

வங்கதேசத்தில் அவ்ஜித் ராய், வஸிக்குர் ரகுமான், அனந்த பிஜோய் தாஸ் ஆகிய இணைய தள எழுத்தளார்கள் மத அடிப் படைவாதிகளால் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவர் இடமாறியுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின்தான் அடுத்த இலக்கு என முஸ்லிம் அடிப் படைவாதிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வசிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ள சிஐஎஃப் தொண்டு நிறுவனம் அவருக்குத் தேவையான நிதியை திரட்டி வருகிறது.

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 mins ago

தமிழகம்

28 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்