தமிழக முதல்வராக 5-வது முறையாக சனிக்கிழமை பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டதாவது:
”தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதவியிழப்பு கண்ட ஜெயலலிதா சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு முதல்வராக இன்று பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.
அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
முன்னதாக சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்ததற்கும் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
உலகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
வேலை வாய்ப்பு
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
விளையாட்டு
12 hours ago