‘‘ஆம் ஆத்மி கட்சியின் நாடகம் கடைசியில் விவசாயி தற்கொலை யால் சோகத்தில் முடிந்து விட்டது’’ என்று ஆர்.எஸ்.எஸ். குற்றம் சாட்டி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ ‘ஆர்கனைசர்’ பத்திரிகை தலையங்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
டெல்லியில் ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் கீழ்த்தரமான அரசியல் நாடகத்தை அரங்கேற்ற அந்தக் கட்சி நினைத்தது. ஆனால், விவசாயி தற்கொலையால் அது சோகத்தில் முடிந்து விட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற அரசியலை தவிர்க்க வேண்டும். விவசாயி தற்கொலையில் இருந்து ஆம் ஆத்மி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய அரசியலில் பொழுதுபோக்கு அம்சத்தை திணிக்க ஆம் ஆத்மி நினைக்கிறது.
24 மணி நேரமும் மீடியாக்களில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி நாடகம் நடத்தி வருகிறது. மீடியாக்கள் மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க, விவசாயி தற்கொலைக்கு முயல்வது போன்ற நாடகத்தை அரங்கேற்ற ஆம் ஆத்மி திட்டமிட்டது. கடைசியில் விவசாயி உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற அரசியலை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இதுபோன்ற நாடகம் பரபரப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அது இந்திய ஜனநாயகத்துக்கும், கலாச் சாரத்துக்கும் முற்றிலும் எதிரானது. மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து ஆம் ஆத்மி வேறுபட்டது என்று கூறிக் கொள்கின்றனர். விவசாயி தற்கொலைக்குக் காரணமாக இருப் பதுதான் வேறுபட்ட கட்சியா? இப்படித்தான் கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி தேர்தலில் சொல்லிக்கொண்டனர். திடீரென நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் தலைவர் வாரணாசியில் போட்டியிட்டார். அப்போது, ஆம் ஆத்மியும் மற்ற அரசியல் கட்சிகள் போன்றதுதான் என்று கூறினர்.
வேளாண் பிரச்சினைகளை மற்ற நில மேம்பாட்டுக் கொள்கை களுடன் இணைத்து பார்க்க கூடாது. வேளாண் துறையில் உண்மையான வளர்ச்சியை தடம்புரள செய்யும் நடவடிக்கைகளில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஈடுபட்டு வரு கின்றன. அதற்காக எந்த வகை யிலும் அரசியல் நடத்தலாம் என்று நாடகமாடுகின்றன. இது பொழுது போக்காக வேண்டுமானால் இருக்கலாம். இதுபோன்ற செயல் கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
16 mins ago
க்ரைம்
20 mins ago
இந்தியா
18 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago