மதமாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதையடுத்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார்.
இது குறித்து அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “கொல்கத்தாவில், நிர்மல் இருதய ஆசிரமத்தில் நான் அன்னை தெரசாவுடன் சில மாதங்கள் பணியாற்றியிருக்கிறேன். அவர் ஒரு புனித ஆன்மா. தயவுகூர்ந்து அவரை விட்டுவிடுங்கள்.”
என்று கூறியுள்ளார்.
நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். “அன்னை தெரசா போன்றவர்கள் நல்ல சேவை மற்றும் பணி செய்துள்ளனர். ஆனால் நோக்கம் என்னவெனில் ஏழைகளை கிறித்துவ மதத்திற்கு மாற்றுவதுதான்.
சேவை அல்லது பணி என்ற பெயரில் மதமாற்றம் செய்யும் போது அந்த சேவை மற்றும் பணி மதிப்பிழந்து விடுகிறது.” என்று பேசியதையடுத்து நாடெங்கும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
கருத்துப் பேழை
35 mins ago
விளையாட்டு
39 mins ago
இந்தியா
43 mins ago
உலகம்
50 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago