இந்த ஆண்டில் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டில் முதல்முறையாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசுகளும் உயர்ந்தன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்துகொள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்து வருவதால், இந்தியச் சந்தையிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 3-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.25 குறைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் முதல் பெட்ரோல் விலை 10 முறையும், கடந்த அக்டோபர் முதல் டீசல் விலை 6 முறையும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டில் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட் ரோல் விலை லிட்டருக்கு 82 காசு களும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசுகளும் உயர்ந்துள்ளன. இதன் மூலம், சென்னையில் ரூ.58.88 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட் ரோல் விலை வரிகள் உட்பட ரூ.59.85-க்கு விற்கப்படும். ரூ.48.91 ஆக இருந்த டீசல் விலை வரிகள் உட்பட ரூ.49.58-க்கு விற்கப் படும். இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

36 mins ago

விளையாட்டு

59 mins ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்