பாஜக மேலிடம் விரும்பினால், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பதாக கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி நேற்று அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதற்காக கிரண் பேடியை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்தது. அவரது முடிவு
ஆம் ஆத்மி விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள கிரண் பேடி, "அரசியல் வாழ்வில் எனது முடிவுகளை மாற்றியமைக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. பாஜகவில் நான் இணையக் காரணம் மோடியின் தலைமைப் பண்பு.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் நான் எந்த தொகுதியில் இருந்து போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். ஒருவேளை கட்சி நான் கேஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட விரும்பினால், நிச்சயம் அதை ஏற்ப்பேன்.
ஏனெனில் வெற்றி வாய்ப்புகள் குறித்து என்னைவிட கட்சிக்கே நன்றாக தெரியும். நான் தோற்றுப்போவதற்காக வரவழைக்கப்படவில்லை, வாகை சூடவே வரவழைக்கப்பட்டுள்ளேன். எனவே கட்சி முடிவுக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
க்ரைம்
2 mins ago
இந்தியா
8 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago